
மட்டக்களப்பில் இன்னாள். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட 10 பேருக்கு திலீபன் நினைவேந்தல் நினைவு கூறுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு

(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிதரன், பா. அரியேந்திரன். மட்டு மாநகரசபை மேஜர் உட்பட 10 பேருக்கு எதிராக தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நினைகூருவதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (17) தடைஉத்தரவு பிறப்பித்து கட்டளையிட்டுள்ளது என மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் திலீபனின் நினைவு கூரும் நடவடிக்கையை நேற்று 17 ம்திகதி தொடக்கம் எதிர்வரும் 26 ம் திகதிவரை பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிதரன், பா. அரியேந்திரன். தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ;. மட்டு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவன், சபாரெத்தினம் சிவயோகநாதன் (சீலன்).
குணராசா குணசேகரன், மட்டக்களப்பு மாநகரசபை பிரதி மேஜர் கந்தசாமி சத்தியசீலன், முன்னாள் கிழக்குமாகாண பிரதி தவிசாளர் இந்திரகுமார் நித்தியானந்தன், கிருஷ;ணபிள்ளை சேயோன் மற்றும் அவர் சாந்த உறுப்பினர்களாலும் அவர்களால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களாலும் விளக்கேற்றி நினைவு கூரல் நடவடிக்கை இடம்பெற உள்ளதாக பொலிஸ் நிலைய புலனாய்வு உத்தியோகத்தர்களால் நம்பகரமான தகவல் கிடைத்துள்ளதாகவும்.
இவ்வாறன நிகழ்வு நடந்தால் இதற்கு எதிரானவர்களால் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவாய்ப்பு இருப்பதனால் மற்றும் நாட்டில் தற்போது கொரோனாh நோய் தாக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக் இந்த நோய் தொற்று கட்டுப்படுத்தும் முகமாக சுகாதார நடவடிக்கையினை நாட்டு மக்கள் கடைப்பிடிக்க அவசியம் இருப்பதனால் இவ்வாறான நினைவு கூறல் நடவடிக்கையை நடைபெறாமல் தடை உத்தரவு ஒன்றை பிரசுரிக்குமாறு மன்றிற்கு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வாகீட் மன்றிற்கு அறிக்கை செய்தார்.;
இதன் பிரகாரம் பொலிசாரினால் மன்றுக்கு கோப்பிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் பொலிசார் குறித்த இடத்தில் 17ம் திகதி தொடக்கம்26 ம் திகதிவரையில் மேற்கொள்ள தீர்மானித்திருக்கும் மேற்படி நடவடிக்கையினை தடுத்து நிறுத்தும் பொருட்டு தடை உத்தரவை பிறப்பிப்பதற்கு ஏதுக்கள் இருப்பது மன்று திருப்திபடுவதனால் 1979 ம் ஆண்டு 15ம் இலக்க குற்றவியல் நடைமுறைச்சட்டகோவையின் பிரிவு (106)1 கீழ் பொலிசார் கோரியவாறு தடை உத்தரவு பிறப்பித்து கட்டளைபிறப்பித்துள்ளது.
இந்த நீதிமன்ற கட்டளைகளை குறித்தவர்களிடம் சென்று பொலிசார் வழங்கிவருவதாக பொலிசார் தெரிவித்தனர்