பல்கலைக்கழகங்களில் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் பல்கலைக்கழகங்களை விரைவில் மீண்டும் திறக்கத் திட்டமிட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களைத் திறப்பது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் அறிக்கை ஒன்றை வெளியிடும்போதே அதன் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
இதனடிப்படையில், சுகாதாரத் துறையுடன் இணைந்து விரைவான திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் 30 வயதிற்குட்பட்ட ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றத்திற்கான கண்காணிப்பு அமைப்பு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சுகாதாரத் துறை துணைவேந்தர்கள் மற்றும் பிற தரப்பினருடன் கலந்துரையாடியபின், பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.





