மதுபானசாலைகளை திறந்தமை கவலைக்குரிய விடயமாகும் _ மருத்துவர்கள் வேதனை

மதுபானசாலைகளைத் திறப்பதற்கு எடுத்துள்ள தீர்மானம் மிகவும் கவலைக்குரியதாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விசனம் வெளியிட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், இது கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் கொவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்ட சகல நடவடிக்கைகளையும் சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடாகும்.

இவ்விடயத்தில், பாதுகாப்புப் பிரிவு முறையாகச் செயற்பட வேண்டும் எனவும், சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். சட்டமானது வெவ்வேறு நபர்களின் கைகளில் ஒப்படைக்கப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *