மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் வீட்டுவசதி மற்றும் மலசல வசதி அற்றவர்களுக்கு குறித்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அனுமதி கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு (17.09.2021) மூதூர் பிரதேச செயலகத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான கபில நுவன் அத்துக்கோரல தலைமையில் நடைபெற்றது.
இத்திட்டத்தின் கீழ் 103 பயனாளிகளுக்கு வீடுகளும் 55 பயனாளிகளுக்கு மலசல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்ட சில பயனாளிகள் மாத்திரம் இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டு அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள, பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாரக் , பிரதேச அரசியல் தலைமைகள், பயனாளிகளும் கலந்து கொண்டனர்.





