அச்சுவேலியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்றவர் கைது

யாழ்ப்பாணம்- அச்சுவேலி, ஆவரங்கால் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற கன்ரர் ரக வாகன சாரதியை, பொலிஸ் விசேட அதிரடி படையினர் கைது செய்து, அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அச்சுவேலி ஆவரங்கால் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி செல்வதாக பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் சுற்றுக்காவல் பணியில் நேற்று (சனிக்கிழமை) பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த கன்ரர் ரக வாகனத்தை மடக்கி பிடித்த பொலிஸார், சாரதியையும் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சாரதியையும் கைப்பற்றப்பட்ட கன்ரர் வாகனத்தையும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் விசேட அதிரடி படையினர் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *