தடுப்பூசி ஏற்ற ஆர்வமாக சென்ற இளைஞர்கள்

கிண்ணியா சுகாதார பிரிவில் 20 – 29 வயதினருக்கான கோவிட் தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு இன்று (19) நான்கு நிலையங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பெரிய கிண்ணியா, பெரியாற்று முனை, மாலின்துறை, எகுத்தார் நகர், கிண்ணியா மற்றும் குட்டிகராச்சி ஆகிய கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதேவேளை, மாஞ்சோலை, மாஞ்சோலை சேனை, ரஹ்மானியா, கட்டையாறு மற்றும் சின்ன கிண்ணியா ஆகிய கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அல் அக்ஸா கல்லூரியிலும் அண்ணல் நகர், மகரூப் நகர், ஆகிய கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அல் அதான் மகா வித்தியாலயத்திலும், பைசல் நகர், ஆலங்கேணி, ஈச்சந்தீவு, இடிமண் ஆகிய கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இர்பான் மகா வித்தியாலயத்திலும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மேற்கூறப்பட்ட நிலையங்களில் இம்மாதம் 19,20,21,22,23 மற்றும் 24ஆம் திகதிகளில் காலை 8.00மணியிலிருந்து பி.ப 2.00மணி வரை தடுப்பூசி வழங்கப்படும் என கிண்ணியா பிரதேச சுகாதார பணியகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *