மட்டு. களுவன்கேணி பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி பகுதியில், கசிப்பு உற்பத்தி நிலையமொன்று மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் இன்று அதிகாலை முற்றுகையிடப்பட்டுள்ளது.

மேலும், கசிப்பு காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 03 இலட்சத்து 20 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா, 56000 மில்லி லீற்றர் கசிப்பு என்பன கைப்பற்றப்பட்டமையுடன் இது தொடர்பில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இங்கு, கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களை ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *