காபூல் மீதான அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல் – 10 பொது மக்கள் உரிழந்தமையை ஒப்புக்கொண்ட பென்டகன்

ஆப்கானிஸ்தான் – கபூலில் ஓகஸ்ட் மாத இறுதியில் நடத்தப்பட்ட அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 10 பொதுமக்கள் உயிரிழந்தமையை பென்டகன் ஒப்புக் கொண்டுள்ளது.

ஐ.எஸ். தற்கொலைப் படை தாக்குதலை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதலில் மொத்தமாக 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த தகவலை அமெரிக்க மத்திய கட்டளையின் தலைவர் ஜெனரல் பிராங்க் மெக்கன்சி வெள்ளிக்கிழமை வெளிப்படுத்தியுள்ளதுடன், தவறுதலுக்கு அமெரிக்கா சார்பில் பகிரங்கமாக மன்னிப்பும் கோரியுள்ளார்.

தலிபான்கள் திடீரென ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த சில நாட்களுக்குப் பின்னர் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.

அவர்கள் தொடர்பான அமெரிக்க மத்திய கட்டளையின் விசாரணை மற்றும் பகுப்பாய்வுகளில் உயிரிழந்தவர்கள் எவரும் ஐ.எஸ். பேராளிகள் அல்ல என்றும், அவர்கள் பொது மக்கள் என்றும் தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *