தந்தையின் கண்ணை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த மகன்- மட்டக்களப்பில் சம்பவம்

தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த சம்பவமொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வாழைச்சேனை- தியாவட்டவான் பாடசாலை வீதியிலேயே குறித்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணாமாக, 67 வயதான தனது தந்தையை கடுமையாக தாக்கிய 19 வயதான மகன், தந்தையின் கண்ணை தோண்டி சிதைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த செயற்பாட்டுக்கு போதைவஸ்துப் பாவனையே காரணமென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரை உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் உறவினர்கள் அனுமதித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அவர் இடமாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில்  அவரது மகனை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *