கடந்த 24மணித்தியாலத்தில் 189 பேர் கைது;இது தான் காரணமா?

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களினுள், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 189 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இதனை காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் தனிமைப்படுத்தல் விதிகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டதன் பின்னர், இதுவரையான காலப்பகுதினுள் 51ஆயிரத்து 581 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் நீண்ட வாரஇறுதி விடுமுறையில், மக்கள் தனிமைப்படுத்தல் சட்டத்துக்குட்பட்ட வகையில் மிகவும் அவதானம் செயற்படுமாறு காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *