திருகோணமலையில் தெருவில் இருந்து மீட்கப்பட்ட சிசு!

திருகோணமலை – கிண்ணியா பிரதேசத்தில் வீதியோரமாக கைவிடப்பட்ட நிலையில், ஒரு மாத சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைவிடப்பட்ட சிசுவானது, கிண்ணியா – சம்வாச்சதீவு பகுதி
வீதியோரமாக கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதம் மதிக்க தக்க சிசு ஒன்று, வீதியில் காணப்படுவதாக கிண்ணியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சிசுவை மீட்டு கிண்ணியா தள வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.

இதேவேளை, சிசு தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *