சீனாவில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 10 பேர் உயிரிழப்பு

தென்மேற்கு சீனாவில் படகு ஆற்றில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஐந்து பேரை காணவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குய்ஜோ மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை மாலை புறப்பட்ட சிறிது நேரத்திலேயே படகு பலத்த காற்றால் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அப்படகில் பயணித்தவர்களில் 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் 5 பேர் மாயமாகியுள்ளதோடு அவர்களை தேடும் பணியை மீட்பு பணியினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

இருப்பினும் கனமழை மற்றும் அடிமட்ட நீரோட்டங்கள் இரவோடு இரவாக மீட்புப் பணிகளுக்கு இடையூறாக இருந்தன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்துக்குள்ளான படகில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் என்று கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *