வேளாண் சட்டங்கள் : தொடர் போராட்டத்தை நடத்த விவசாயிகள் திட்டம்!

<!–

வேளாண் சட்டங்கள் : தொடர் போராட்டத்தை நடத்த விவசாயிகள் திட்டம்! – Athavan News

வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டத்தினை முன்னெடுக்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 9 ஆம் திகதிவரை தொடர் போராட்டம் நடைபெறவுள்ளது.  இதனை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் போராட்டகாரர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்லமாட்டார்கள் என உறுதியளித்துள்ளதை அடுத்தே போராட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அடையாள அட்டையை வைத்திருக்கும் விவசாயிகள் மட்டும் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சிங்கூ எல்லையில் இருந்து தினசரி 200 விவசாயிகள் பொலிஸ் பாதுகாப்புடன் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *