தியாகதீபம் திலீபனின் 34ஆம் ஆண்டின் 5ஆம் நாள் நினைவேந்தல்!

<!–

தியாகதீபம் திலீபனின் 34ஆம் ஆண்டின் 5ஆம் நாள் நினைவேந்தல்! – Athavan News

உண்ணா விரதம் இருந்து உயிா்நீத்த அகிம்சைப்போராளி தியாகதீபம் திலீபனின் 34ஆம் ஆண்டின் 5ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் குறித்த நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், மகளிா் அணித் தலைவி  வாசுகி சுதாகா் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளா்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினாா்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *