கணவனை பொல்லால் தாக்கி கொலை செய்த மனைவி பொலிஸில் சரண்- அவிசாவளையில் சம்பவம்

மனைவியின் தாக்குதலுக்கு இலக்காகி, கணவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று அவிசாவளையில்  பதிவாகியுள்ளது.

அவிசாவளை– தைகல, கபுவெல்லவத்த பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மதுபோதையில் வருகைத் தந்த கணவர்,  மனைவியை தாக்கியுள்ளார்.

இதன்போது மனைவியும் பொல்லால் பதில் தாக்குதல் நடத்தியபோது, கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, தனது 8 வயதான மகளுடன், அதே வீட்டில் தங்கியிருந்த 27 வயதான மனைவி, அவரது மாமியார் வீட்டிற்கு சென்று, குழந்தையை ஒப்படைத்த நிலையில், பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் அவிசாவளை– தைகல, கபுவெல்லவத்த பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஜனக்க மதுஷங்க ஜயதிலக்க என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *