உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மர நடுகை வேலைத் திட்டம் முன்னெடுப்பு

நுவரெலியா- ஹற்றனில் உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு மர நடுகை வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஓசோன் படலம் தேய்வடைவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதை பாதுகாப்பதற்கான தீர்வுகளை கண்டறியவும் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 16ம் திகதி ஓசோன் தினம் உலகலாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.

அந்தவகையில் ஹற்றன்- கொட்டகலை கெம்பிரிட்ஜ் கல்லூரியில் ஹற்றன் பீஸ் சிட்டி ரோட்ராக்ட் கழகத்தின் ஏற்பாட்டில், மர நடுகை வேலைத்திட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் ஹற்றன் பீஸ் சிட்டி ரோட்ராக்ட் கழகத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தனர்.

இதேவேளை கொழும்பு, யாழ்ப்பாணம், குருணாகல் ஆகிய இடங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இச்செயற்றிட்டத்தின் மூலம் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *