இலங்கையில் நேற்று ஒரு இலட்சத்து 75 ஆயிரத்து 696 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

இலங்கையில் நேற்று மாத்திரம் மேலும் ஒரு இலட்சத்து 75 ஆயிரத்து 696 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

குறிப்பாக நேற்று 42 ஆயிரத்து 814 பேருக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் 5 ஆயிரத்து 165 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இதுவரை 3 இலட்சத்து 85 ஆயிரத்து 885 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 81 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் 14 ஆயிரத்து 464 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை நேற்றைய தினம் 16 ஆயிரத்து 252 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை 91 ஆயிரத்து 992 பேருக்கு ஃபைசர் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், நேற்றையதினம், ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 465 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தபட்ட நிலையில், இதுவரை 3 இலட்சத்து 49 ஆயிரத்து 848 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *