வவுனியாவில் வீதிக்கு வந்த யானை – பயணிகள் அசௌகரியம்

வவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் வீதிக்கு வந்த யானையால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

வவுனியா புளியங்குளம் – நெடுங்கேணி வீதியில் யானை ஒன்று வீதிக்கு வந்ததனால் அவ் வீதி வழியாக போக்குவரத்து செய்த பயணிகள், வாகன சாரதிகள் எனப் பலரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

இதேவேளை, அவ்வப்போது குறித்த வீதிக்கு யானை வருவதால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *