பிரான்சின் ஒபேவில்லியே மாநகர சபை (Aubervilliers municipal council)க்கு யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் பத்மநாதன் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் நேற்றையதினம் விஜயம் செய்தனர்.
இந்நிலையில் ஒபேவில்லியே மாநகர சபை பிரதி முதல்வர் மற்றும் சர்வதேச விடையங்கள் தொடர்பான பொறுப்பாளர் ஆகியோருக்கும் இடையில் நேற்றைய தினம் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
இதில் ஒபேவில்லியே மாநகர சபையின் செயற்பாடுகள் மற்றும் அதனுடைய நிர்வாக அலகுகள் அவற்றை நடைமுறை படுத்தும் முறை மற்றும் அதிகார வரம்புகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது யாழ் மாநகர முதல்வர் ஒபேவில்லியே முதல்வரை யாழ்ப்பாணத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்.
இந்த சந்திப்பு இரு மாநகர சபைகளுக்கும் ஒர் அனுபவ பகிர்வாக அமைந்ததாக முதல்வர் குறிப்பிட்டார்.



