சமிந்த லக்ஷனின் இறுதிக் கிரியைகள் இன்று!

ரம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தினால் உயிரிழந்த சமிந்த லக்ஷனின் இறுதிக் கிரியைகள் இன்று (வெள்ளிக்கிழமை) தெவலேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிரிவடுன்னையில் இடம்பெறவுள்ளன.

இறுதிக்கிரியைகள் முடியும் வரை அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட முப்படையினருக்கும் உதவுமாறு பாதுகாப்பு செயலாளரிடம் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, பொது பாதுகாப்பு சட்டத்தின் பிரிவு 12 (1) இன் படி, கேகாலை மாவட்டத்தையும் உள்ளடக்கிய பொது ஒழுங்கை பராமரிக்க ஆயுதப்படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

தெவலேகம, ரொக்கன மற்றும் கேகாலை பொலிஸ் பிரிவுகளில் நாளை வரை அமைதியை நிலைநாட்டுவதற்கு முப்படையினரும் உதவவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *