
ஆண்களுக்கான செர்பியா பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டிகளில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வும் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
காலிறுதிப் போட்டியொன்றில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சகநாட்டு வீரரான மியோமிர் கெக்மனோவிக்கை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை மியோமிர் கெக்மனோவிக், 6-4 எனக் கைப்பற்றினார்.
இதனைத்தொடர்ந்து சுதாகரித்துக்கொண்ட நோவக் ஜோகோவிச், அடுத்த இரண்டு செட்டுகளையும் 6-3, 6-3, எனக் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.
——————————————————————————————————————————————————————————–
மற்றொரு காலிறுதியில் ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வ், செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை, செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 6-4 எனக் கைப்பற்றினார்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், இருவரும் விட்டுக்கொடுக்காமல் ஆக்ரோஷமாக விளையாடிதால், செட் டை பிரேக் வரை நீண்டது.
இதில் இறுதி வரை சிறப்பாக விளையாடிய ரஷ்யாவின் ஹென்ரி ரூபெல்வ், செட்டை 7-6 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
இருவரும் தலா ஒரு செட்டைக் கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட், இரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது.
இதில் பெரிதளவான நெருக்கடிகள் இல்லாமல், ஜிரி லெஹெக்காவை எதிர்கொண்ட ஹென்ரி ரூபெல்வ், செட்டை 6-2 என இலகுவதாக கைப்பற்றி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.