மிருசுவிலில் சற்றுமுன் இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிறுமி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் பயணித்த மகேந்திரா ரக வாகனத்தை புகையிரதம் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் சற்றுமுன்னர் சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

இதன்போது, மகேந்திராவைச் செலுத்தி வந்த தந்தையும் மற்றுமோர் சிறுமியும் படுகாயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மிருசுவில் பகுதியில் உள்ள வைத்தியசாலை முன்பாக இருக்கும் வீதிக் கடவையை கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *