விடுதலைப்புலிகளின் புதையலை தோண்டி எடுக்கும் பணியில் ஈடுபட்ட பொலிஸார்!

புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மற்றும் முக்கிய பொருட்களை புதைத்து வைத்துள்ளதாக நம்பப்படும் இடம் ஒன்றினை தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இடத்தில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டும் நடவடிக்கை இன்று (21) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தோண்டும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ள காணியின் சொந்தக்காரர் வெளிநாடு ஒன்றில் வசித்துவரும் நிலையில் அக்காணியை வேறொருவர் பராமறித்து வருகிறார்.

குறித்த காணியில் தோண்டும் நடவடிக்கைக்கான அனுமதியினை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா வழங்கியுள்ள நிலையில் கிராம அலுவலகர்,மருத்துவபிரிவினர், பொலிஸார், படையினர், சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்டோர் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காணியில் மூன்று வேறு இடங்களில் நிலத்தில் தோண்டப்பட்ட போதும் எதுவித பொருட்களும் கிடைக்காத நிலையில் குறித்த அகழ்வுபணியினை மாலை 4.30 மணியவில் முடிவிற்கு கொண்டுவந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *