
வலிதென்மேற்கு பிரதேச சபையின் அமர்வு தற்போது தவிசாளர் ஜெபநேசன் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இன்றையதினம் பிரதேச சபை உறுப்பினர்கள் நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் தொடரும் விலைஅதிகரிப்பு எதிராக சபையில் கவனயீர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு உரையாற்றிய பிரதேச சபை உறுப்பினர் லோகப்பிரகாசம் றமணன்,
நாம் 30 வருடங்களாக வறுமையில் வாடியிருக்கின்றோம் ஆனால் தற்போது சிங்கள இனத்தவர் மிகவும் வேதனையடைந்துள்ளார்கள் அவர்கள் அழைப்பையேற்று நாங்கள் இங்கிருந்து குரல்கொடுத்துக்கொண்டிருக்கின்றோம்.
நாம் எவ்வளவோ துன்பத்தில் இருந்தபோது பெரும்பான்மை அப்பாவி சிங்கள சமூகம் ஓரளவுக்காவது நாட்டில் நின்மதியாக வாழ்ந்தார்கள் ஆனால் இன்று நாம் பட்ட கண்ணீர் வேதனைகளால் அவர்கள் சுக்குநூறாகிப்போய் இருக்கின்றார்கள்.
நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு எங்களுக்கு எந்தப்பாதையும் இல்லை நாங்கள் இறக்கும் வரை இங்கேயேதான் இருக்கப்போகின்றோம் என தெரிவித்தார்.
அத்துடன் சிங்கள இளைஞர்கள் தற்போது எந்த இன மத கலாசாரங்களையும் பார்க்காது புதிய கலாச்சாரத்தை உருவாக்குவதற்கு ஆக்ரோசமாக போராடி வருகின்றார்கள். நாங்கள் அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கைகொடுக்கின்றோம். சிங்களவர்களின் உணர்வை மதிக்கின்றோம் அவர்களுக்கு ஆதவை வழங்குகின்றோம் என தெரிவித்தார்.