
இன்றைய சபை அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கருத்து தெரிவிக்கையில்:
எதிர்க் கட்சி குறை கூறிக்கொண்டு இருப்பதால் ஒன்றுமே ஆகி விடாது.
நிதி அமைச்சர் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றுள்ளார், ஆகவே ஒரு நல்ல முடிவு கிடைக்கும்.
அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாக எதிர்க்கட்சி கூறினீர்கள். எங்கே அதை காணவில்லை.
பாராளுமன்றில் பெரும்பான்மை காட்டுங்கள் பார்ப்போம்.மக்களின் கோபம் உண்மை. அதை தீர்ப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம். நீங்கள் கூச்சல் போட வேண்டாம் என்றார்.

