
வலிதென்மேற்கு பிரதேச சபை அமர்வு இன்று காலை முதல் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் பிரதேச சபை உறுப்பினர்கள் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் சபை அமர்வில் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு உரையாற்றிய பிரதேச சபை உறுப்பினர் க.ஜெசிந்தன்,
இந்நாட்டில் உள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடியின் சூழ்நிலையில் பள்ளி பிள்ளைகள் அரைவயிற்று பசியுடன் உணவின்றி பள்ளிக்குச் செல்கிறார்கள். இந்த கொடுமையினை அரசாங்கமோ அல்லது அவர்களின் பிள்ளைகள் அனுபவித்து இருக்கிறார்களா ? இதில் கூலிக்கு வேலை செய்வோரது நிலைமை மிக மோசமானதாக காணப்படுகிறது அத்துடன் நாடு அரைநிர்வாணமாக மாறியுள்ளது. இதன் காரணமாகவே தான் அரைபாதி ஆடையுடன் வந்திருக்கிறேன் எனக்குறிப்பிடடார்.
மேலும்,கடந்த நல்லாட்சி காலங்களில் 7 ஆயிரத்து 797 அமெரிக்க பில்லியன் டொலர்கள் சேமிப்பில் இருந்த போதும் தற்போது ஆயிரத்து 229 அமெரிக்க பில்லியன் டொலர்களே சேமிப்பில் உள்ளது.எனவே மக்களின் உழைப்பினை விழுங்கி விட்டு அவர்களை சுட்டு தள்ளுகின்ற நிலைக்கு வந்துள்ளார்கள்.
முள்ளிவாய்க்காலில் மக்களை குண்டுகளை போட்டு அழித்ததற்காக வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்களை சுட்டுத்தள்ளினார்கள் இதனை பயங்கரவாதம் என்று கூறிய போது பாற்சோறு பொங்கி கொண்டாடினார்க்ள. இப்போது அவர்களேயே சுட்டுத்தள்ளுகின்றார்கள்.
எனவே மக்களின் ஜனநாயக போராடடத்தினை ஆயுத முறையில் அடக்குவதனை வன்மையாக கண்டிப்பதாகவும் ,ரம்புக்கனை படுகொலையில் இறந்த இளைஞரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்ததோடு, மேலும் தமிழ் அமைச்ச்சர்கள் மற்றும் தமிழ் உறுப்பினர்கள் அனைவரும் மக்களின் கால்களில் விழுந்து மண்டியிட்டு மன்னிப்பு கேளுங்கள்.
எனவே மக்களின் இந்த போராடடத்திற்கான கோரிக்கைகளை ஏற்று அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றவாறுதெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.