
பாராளுமன்ற அமர்வு காலை 10 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய ஐக்கியமக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கருத்து தெரிவிக்கையில்:
சர்வதேசத்துடன் பேசுவதற்கு எம்மால் முடியும்.நாட்டை கட்டியெழுப்புவதற்கு முடியும்.நீங்கள் உடனடியாக பொதுத் தேர்தல் ஒன்றை தயார் செய்யுங்கள்.நாட்டு இந்த நிலைக்கு சென்றமைக்கு காரணம் நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி முறைமை தான்.அதனை இல்லாமல் செய்து பாராளுமன்றுக்கு அதிகாரத்தை வழங்குங்கள்.வாரக்கணக்கில் இங்கே பேசி ஒன்றுமே நடைபெறப்போவதில்லை.பல லட்சம் மக்கள் எம்மை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர் என்றார்.