கொடிகாமம் விபத்து! தந்தையும் பிள்ளைகள் இருவரும் மரணம்

யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் வாகனம் ஒன்றின் மீது தொடருந்து மோதியதில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த பிள்ளைகள் இருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மகேந்திரா ரக வாகனத்தில் பயணித்த ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவர் கொடிகாமம் பகுதியில் உள்ள புகையிரதக் கடவையை கடக்க முற்பட்டபோது தொடருந்து மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது.

தந்தையும் பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் பல சந்தர்ப்பங்களில் விபத்து இடம்பெற்றுவருவதாகவும் தொடருந்துப் பாதைக் கடவைக் காவலாளியை பணிக்கு அமர்த்தவில்லை என்றும் அங்கு கூடியுள்ள பிரதேச மக்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *