
பதுளை கனுபெலல்ல, ஓயவத்த பகுதியில் நேற்றிரவு நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பணக்கொடுக்கல் வாங்கல் காரணமாக குறித்த கொலை இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய 38 வயதுடைய சந்தேக நபர் தலைமறைவாகி உள்ளதாகவும், அவரை கைது செய்யும் நடவடிக்கைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.