நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் வேலை வாய்ப்பு இன்மை போன்ற காரணங்களால் இந்தியா குறிப்பாக தமிழகம் நோக்கி செல்லும் அகதிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது.
இலங்கையிலிருந்து சட்டவிரோத பயணங்கள் மூலம் உயிரை பணயம் வைத்து இந்தியா செல்வோர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாலியல் சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவாக இருக்கும் நித்தியானந்தா உருவாக்கியுள்ள கைலாசா நாட்டிற்கு வருமாறு தனது முகப்புத்தகம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள முகப்புத்தக பதிவில்
கைலாசா வாசியாக விருப்பமா?
விருப்பமானவர்கள் தங்கள் தொலைபேசி எண்ணை கமண்ட் செய்யவும்! விரைவில் அழைக்கிறோம்! என குறிப்பிட்டுள்ளார்.
