
தற்போதைய நெருக்கடிக்கு அரசாங்கத்தை தீர்வு காண வலியுறுத்தி, அரசாங்க பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் திங்கட்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் தொடர் போராட்டங்கள் காரணமாக, ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலைக்கு வருவதற்கு போக்குவரத்து வசதிகள் இல்லாமல் பல சிரமங்களை எதிர்க்கொள்வதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டும் மற்றும் மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள பாடசாலையில் படிக்க வேண்டும் என்ற அவர்களின் முன்மொழிவு அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது என அதிபர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு நியாயமான தீர்வை அரசாங்கம் வழங்குமாறு கோரி, திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கலந்து கொள்ளுமாறு ஒன்றிய செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.