
அரசாங்கத்தோடு இனைந்து அமைச்சரவையில் அங்கம் வகித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை ஏப்ரல் 04 ஆம் திகதி விலக்கிக்கொண்டது.
அத்துடன் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படபோவதாகவும் அறிவித்தது. இந்நிலையில் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பியும்,தவிசாளர் மருதபாண்டி ராமேஷ்வரன் எம்.பியும் நாடாளுமன்றத்தில் எதிரணி வரிசையில் அமர்ந்து சபை நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

