
அரசியல் ஸ்திரத்தன்மையுடன் கூடிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்ததாக ஊடக அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை ஏற்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தொடர்ந்தும் அமைச்சுப் பதவியில் செயற்படவுள்ளதாக ஊடக அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.