இலங்கையை பல தேசங்கள் கொண்ட நாடாக்க சமஷ்டி கட்டமைப்பை ஏற்படுத்துவோம்! – கஜேந்திரகுமார் அழைப்பு

வெறுமனே ஜனாதிபதி முறைமை ஒழிப்பை மட்டும் முன்னெடுக்காது, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலங்கையை பல தேசங்கள் கொண்ட நாடாக உருவமைத்து ஒரு சமஷ்டி கட்டமைப்பை உருவாக்ககுக என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த அழகிய தீவு தனியே சிங்கள – பெளத்தர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. இது தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கும் உரித்தானது என்பதை ஏற்றுக்கொண்டு முன்னகர்ந்தால் மட்டுமே நாம் ஒரு சுபீட்சமான எதிர்காலத்தை அடைய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *