சமூகத்தில் டெல்டா வைரஸ் பரவவில்லை என காண்பிக்க முயற்சி

டெல்டா வைரஸ் இன்னமும் சமூகத்துக்குள் பரவவில்லை என காண்பிக்க சுகாதார அமைச்சு முயற்சிப்பதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்திய ஷெனால் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதலாவது கொரோனா அலைக்குப் பின்னர், நாட்டு மக்களும் அரசாங்கமும் கொரோனா வைரஸை மறந்துவிட்டனர்.

இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்டிருந்த போது, தமிழ் – சிங்கள புதுவருடக் காலத்தில் மீண்டும் கொரோனா வைரஸை அனைவரும் மறந்திருந்தனர்.

டெல்டா வைரஸ் இன்னமும் சமூகத்தில் பரவவில்லை என காண்பிக்க சுகாதார அமைச்சு முயற்சிக்கிறது.

நாட்டில் சுகாதார பாதுகாப்பு சட்டங்களில் அமுலில் இருந்தாலும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்பதால், மீண்டும் கொரோனா வைரஸ் அலை ஏற்படுவதைத் தடுக்க முடியாது.

சுகாதார அமைச்சால் வழங்கப்படும் கொரோனா வைரஸ் தொடர்பான பாதுகாப்பு ஆலோசனைகள் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டியது அனைத்துத் தரப்பினரதும் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.

Leave a Reply