
கடந்த சில வாரங்களாக நாட்டில் தங்கத்தின் விலை அதிகரிப்பு தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் மீண்டும் எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை பாரியளவில் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மே மாதம் 3 ஆம் திகதி அக்ஷய திருதி கொண்டாடப்படவுள்ள நிலையில்,தங்கத்தின் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் விலை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
நடப்பு ஆண்டில் இதுவரையில் தங்கம் விலையானது கிட்டதட்ட 7% அதிகரித்துள்ளது. இதன் தேவை அதிகரித்து வரும் நிலையில், இன்னும் விலை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.