
பிரச்சினைகளுக்கு தீர்வினை முன்வைக்க முடியாவிட்டால் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்து விட்டு வீடு திரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இதுவரை தீர்வு காணப்படாத நிலையில், 225 பேரையும் எவ்வாறு பதவி விலகுமாறு கூறுமுடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்
பொது மக்களுக்கு நாட்டின் பிரச்சினைகள் குறித்து போதுமான விளக்கம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே ஆட்சியாளர்களிடம் கேள்விகள் முன்வைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகையினால் 225 பேரும் பதவியை துறந்து வீடு திரும்புவதாக கோரிக்கை விடுப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.