தேயிலை ஏற்றுமதியில் வீழ்ச்சி

கொழும்பு, ஏப் 23

கடந்த மார்ச் மாதம் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் அளவில் வீழ்ச்சி காணப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் 23.17 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25.81 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பொதி செய்யப்பட்ட தேயிலை ஏற்றுமதி பெரும் வீழ்ச்சியை கண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் இலங்கை தேயிலையை அதிக அளவில் இறக்குமதி செய்த நாடாக ஈராக் பதிவாகியுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் இரண்டாவது இடத்திலும், ரஷ்யா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *