
உக்ரைன், ஏப் 23
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 58-வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைன் – ரஷியா இடையே நீடித்து வரும் போரால் இருதரப்பிலும் பொருட்சேதம், உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷியா போரை நிறுத்த உலக நாடுகள் முயற்சிகளை எடுத்து வருகிறது.
இருப்பினும் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் கோரிக்கையை ரஷியா நிராகரித்துள்ளது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார் .
கிறிஸ்தவர்களின் முக்கிய தினமாக கருதப்படும் ஈஸ்டர் திருநாளுக்காக ரஷியாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் ,அதை ரஷியா நிராகரித்து விட்டத்த்தாகவும் தெரிவித்த அவர் ,இருப்பினும் அமைதி ஏற்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார் .