பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஜி.எல் பீரிஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன ஆகியோரை அமெரிக்கத் தூதர் ஜூலி சுங் கடந்த புதன்கிழமை(20) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து சுமுகமான கலந்துரையாடல் நடைபெற்றது. நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்தும் அமெரிக்க தூதுவரிடம் தெளிவுபடுத்தப்பட்டது.
