
இடைக்கால அரசாங்கம் அமைந்தாலும் தானே பிரதமர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு இதுவரை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் தம்மிடம் கோரவில்லை.
காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த தயார்.
பேச்சுவார்த்தைக்கு வராத வரை போராட்டம் தொடலாம் என பிரதமர் தெரிவித்தார்.
இதேவேளை, பிரதமர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், அந்த அறிக்கை உண்மைக்குப் புறம்பானது என்று பிரதமர் கூறினார்.