காஷ்மீருக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் திட்டம் : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவைகள் துண்டிப்பு!

காஷ்மீருக்குள் ஊடுருவதற்கு 60 முதல் 70 தீவிரவாதிகள் காத்திருப்பதாக இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து உரி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையம் மற்றும் தொலைப்பேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உரி செக்டார் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து,  இந்திய நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *