திருமலையில் வெடிபொருட்களுடன் பயணித்த நபர் கைது

திருகோணமலை – ரொட்டவெவ பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து கடற்தொழிலுக்கு பயன்படுத்தும் வெடிபொருட்களுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிகிந்தலை பிரதேசத்திலிருந்து திருகோணமலை நோக்கி மோட்டார்சைக்கிளில் வந்த சந்கேதநபரை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது அவரிடமிருந்து டெட்டனேட்டர் 700 மற்றும் ஓட்ட ஜெல் 450 போன்ற வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்டவர் மிகிந்தலை பகுதியைச் சேர்ந்த முகம்மட் அக்ரம் (21 வயது) என தெரியவருகிறது.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதுடன், நாளையதினம் திருகோணமலை நீதவான் முன்னிலையில் முன்னிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சந்தேகநபர் திருகோணமலையில் உள்ள கடற்தொழிலாளர்களுக்கு இதனைக் கொண்டு செல்வதாக பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *