கடன் மீள்கட்டமைப்பு ஒத்துழைப்புகளை இலங்கை வரவேற்கிறது

கொழும்பு, ஏப் 23

ஜப்பானில் நடைபெற்ற 4ஆவது ஆசிய-பசுபிக் நீர் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொண்டு உரையாற்றினார்.

48 நாடுகளின் பங்குப்பற்றலுடன் இடம்பெற்ற இந்த மாநாட்டில், ஜனாதிபதி காணொளி தொழில்நுட்பம் வழியாக கலந்துகொண்டார்.

அவர் அதில் உரையாற்றுகையில், நெருக்கடியான காலகட்டத்தில் பொருளாதார மீட்சிக்கான முதலீடுகள், தொழில்நுட்ப பரிமாற்றம், நிதியுதவி, பரந்த அபிவிருத்தி மற்றும் கடன் மீள்கட்டமைப்பு ஒத்துழைப்புகளை இலங்கை வரவேற்பதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *