
யாழ்ப்பாணம், ஏப் 23
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக சலுகை விலையில் சனிக்கிழமை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மக்கள் இதனைப் பெற்றுக் கொள்ள ஆர்வம் காட்டி வருவதோடு, வெயிலுக்கு மத்தியில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.
இதற்கமைய, ஒரு கிலோ கிராம் வெள்ளை அரிசி ரூ.145, ஒரு கிலோ கிராம் நாட்டு அரிசி ரூ.145 ரூ, ஒரு கிலோ கிராம் சம்பா அரிசி ரூ.175ற்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.