
கொழும்பு, ஏப் 23
டொலரின் பெறுமதி அதிகரித்துச் செல்வதனால் அடுத்த வாரம் முதல் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் அனைத்து இருப்புகளும் தற்போது தீர்ந்துவிட்டதாகவும், இரண்டு வாரங்களாக புதிய இருப்புக்கள் இறக்குமதி செய்யப்படவில்லை என்பதோடு அடுத்த வார இறுதிக்குள் குறிப்பிட்ட பால் மா தொகை இலங்கைக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சரக்கு வந்தவுடன், டொலரின் பெறுமதியைக் கருத்தில் கொண்டு விலையைக் கணக்கிட்டு பால் மாவின் விலை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.