<!–
வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் ஆரம்பித்த போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இதுவரை சுமார் 10 கைதிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தமது தண்டனையை குறைக்குமாறு கோரி சிறைச்சாலை கூரை மீதேறி கைதிகள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும் கைதிகளின் கோரிக்கைக்கு சாதகமான தீர்வை வழங்க தமது திணைக்களத்திற்கு இயலாதென சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.





