
தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் கால்நடை அபிவிருந்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.அரவிந்த குமாரின் வீட்டுக்கு முன்பாக தோட்டப்பகுதி இளைஞர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து அருகில் உள்ள பல பொலிஸ் நிலையங்களில் இருந்து பொலிஸ் அதிகாரிகள் லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு அமைச்சரின் வீட்டிற்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராஜாங்க அமைச்சரை இராஜினாமா செய்யுமாறு கோரி தோட்டப்பகுதி இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.