வவுனியா கிராமசேவகர்கள் இருவருக்கு கொரோனா!

வவுனியா கனகராயன்குளம் தெற்கு மற்றும் ஊஞ்சல்கட்டி பிரிவு கிராமசேவகர்கள் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இக் கிராமசேவகர்களுக்கு காய்ச்சல் இருந்த நிலையில், அன்டியன் பரிசோதனையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.

அதையடுத்து, அவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *