வவுனியாவில் இருபது நாட்களில் 2,222 பேருக்கு கொரோனா- 106 பேர் உயிரிழப்பு

வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் 20 ஆம் திகதி வரை 2,222 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 106 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதாவது நாட்டில் வைரஸ் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு வீதத்தில், வவுனியாவில் மரணிப்போரின் தொகை பாரியளவில் காணப்படுவதாக சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வவுனியாவில் மக்களின் அசமந்தமான செயற்பாட்டால் மரண தொகை கட்டுக்கடங்காமல் செல்கின்றது.  இவர்கள் இதன் பாரதூரமான தன்மையை உணரவில்லை. இது பாரிய ஆபத்தான நிலைமை ஏற்படுத்தலாம் என சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகவே, வவுனியா மாவட்டத்தின் நிலை தொடர்பில் மக்கள் சிந்தித்து, சுகாதார நடைமுறைகளை இறுகப் பின்பற்றி செயற்பட வேண்டும் என சுகாதார பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *